“எம்மைப் பாதுகாக்கின்ற பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது” – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் அஞ்சலி நிகழ்வில் சிவஞானம் சிறிதரன் !

“எம்மைப் பாதுகாக்கின்ற பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது”என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்

தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மறைந்த பாடகர் தமிழ் மக்களினுடைய உணர்வுகளோடு பயணித்த ஒருவர் அதற்காக பல பாடல்களை எங்கள் இனம் சார்ந்து எங்கள் தேசம் சார்ந்து பாடி இருக்கின்றார்.

என்று குறிப்பிட்ட அவர், இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கும் இப்போதுள்ள 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதனால் இலங்கையில் நடைபெறப்போகும் பல காரியங்களும் எங்களை தாண்டி ஏதோ செய்யப் போகின்றது என்ற அச்சமும் எங்களிடம் இருக்கின்றது

எங்களுடைய பாதுகாப்பையும் எங்களது வாழ்வையும் இருப்பையும் இந்தியா தான் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எங்களை உங்களிடம் ஒப்படைத்து காத்திருக்கின்றோம்.

எனவே எம்மைப் பாதுகாக்கின்ற பொறுப்பும் இந்தியாவிடம் ஒப்படைக்க பட்டிருக்கின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அஞ்சலி நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் குருகுலராஜா மற்றும் கலைப் படைப்பாளிகள் கலைஞர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தியதுடன் தமது இரங்கல் செய்தியினையும் துணைத்தூதுவர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *