“புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் இருக்காது” – பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

“புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் இருக்காது.அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூற இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது ”என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“15 மில்லியன் டொலர் நிதியையும் கொடுத்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், இந்திய பிரதமர் கூறியிருக்கிறார். இந்தியாவின் இந்த மென்மையான காலனித்துவத்திற்கு அடிபணியாமல் போராடி உயிர்த் தியாகம் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்திய அணியில் இருந்து அரச உணவை உண்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் இருக்காது.எமது நாட்டில்13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூற இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது ” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இது ஒரு இறையாண்மை உள்ள ஒரு நாடு என்ற ரீதியில் எங்களை மீது யாரும் அழுத்தங்கள் பிரயோகிப்பதை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *