ஏ-9 வீதி புனரமைப்புப் பணி இம்மாத இறுதியில் ஆரம்பம் – இரு மாதங்களில் பஸ் போக்குவரத்து

bus-17o1.jpgஏ-9 வீதி புனரமைப்புப் பணிகளை இம்மாதம் இறுதியில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார். கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ஏ-9 வீதியினூடாக போக்குவரத்து நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஏ-9 வீதியில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் புனரமைப்புப் பணிகளை உடன் ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறினார்.

வுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான 130 கிலோமீட்டர் தூரமான வீதி செப்பனிடப்படவுள்ளதாக வும் இது குறித்து பொறியியலாளர்கள் அடங்கலான குழு நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். வீதியை புனரமைப்பதற்கான செலவு குறித்து மதிப்பீடு செய்து வருவதாகவும் இதுவரை 8 கம்பனிகள் வீதியை செப்பனிடும் பணிகளை முன்னெடுக்க முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். வீதி செப்பனிடும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக 20-30 கிலோ மீட்டர் வரையான பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் வழங்க உத்தேசித்துள்ளதா கவும் அவர் தெரிவித்தார். ஏ-9 வீதியை செப்பனிடும் பணிகளை துரிதமாக பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதா கவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை இன்னும் 2 மாதங்களில் ஏ-9 வீதியில் பஸ் போக்குவரத்துகளை ஆரம்பிக்க உள்ளதாக போக்கு வரத்து அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கூறினார். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களை அழை த்து வருவதற்காக இ.போ.ச பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டு ள்ளதாகவும் அவை ஏ-9 வீதியினூடாக மக்களை அழை த்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். இதற்கென 6 பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதேவேளை மன்னாரில் இருந்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்துக்கான ஏ-32 வீதியை செப்பனிடும் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *