திவுலபிட்டிய பகுதியில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ! – எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.

திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் சேவையாற்றியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை ஊடாக குறித்த 69 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் 400 இற்கும் அதிகமானவர்கள் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். தனிமைப்படுத்தலில் உள்ள 156 பேரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கப்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் 150 தொழிற்சாலை ஊழியர்களின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளே இன்று கிடைக்கப்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் 1400 பேரிற்கு அதிகமானவர்களுக்கு இன்று பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *