“சிறுபான்மையினருக்கு எவ்விதமான பாதிப்பும் நிகழ்த்தாத பெருந்தொகையானவர்களின் விருப்பமே உண்மையான ஜனநாயகம்“ – வவுனியாவில் மகிந்த தேசப்பிரிய !

“சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் நிகழாத விதத்தில் எடுக்கப்படும் பெருந்தொகையானவர்களின் விருப்பமே உண்மையான ஜனநாயகம்“ என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று(05.10.2020) விஜயம் செய்த அவர் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பெரும்பான்மையினர் ஒண்றிணைந்து எடுக்கும் தீர்மானங்கள் தான் ஜனநாயகம் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையான ஜனநாயகம் என்பது அவ்வாறு அல்ல. ஜனநாயக ஆட்சியில் மாத்திரமல்ல சாதாரணமாக ஒரு மரணச்சடங்குகளில் கூட பெருந்தொகையினர் சிறுதொகையினரது உரிமைகளை நசுக்கி செயற்படும் விதத்தினை நாம் காண்கின்றோம்.

பெரும்பான்மை இனத்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்து நாம் தேர்தலை நடத்தினால் சிறுபான்மை இனத்தவர்களின் விருப்பம் மறுதலிக்கப்படுகின்றது. ஆகவே ஒரு வர்ணத்தினால் தீட்டப்படும் ஓவியம் அழகாக இருக்காது. எனவே சிறுபான்மையினருக்கு எவ்விதமான பாதிப்பும் நிகழாத விதத்தில் பெருந்தொகையானவர்களின் விருப்பமே உண்மையான ஜனநாயகம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *