இலங்கையில் அதிதீவிர சமூகப்பரவலாக உருமாறும் கொரோனா – வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி !

இலங்கையில் கொரோனா சமூகப்பரவலாக உருமாறிவரும் நிலையில் இன்றைய தினம் சிலாபம், மன்னார், புத்தளம் பகுதியை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையானது மேலும் செ்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் கடந்த 23ம் திகதி பங்கேற்ற சிலாபத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் 23ம் திகதி குறித்த நபர் கோட்டையில் உள்ள பஸ் டிப்போவுக்கு பயணம் செய்ததாகவும், மேலும் 30ம் திகதி நுவரெலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.

மன்னார் – பட்டித்தோட்டத்தில் உள்ள ஆயர் இல்லத்தில் கட்டிட பணியில் இருந்த புத்தளம் – கட்டுநேரியை சேர்ந்த ஒருவருக்கு நேற்று (08.10.2020) இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டிட பணியில் ஈடுபட்ட குறித்த நபர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக நேற்று முந்தினம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்ற குறித்த நபருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

இவருடன் கட்டிட நிர்மான பணியில் இருந்த 32 பேர், அவருடன் வந்த 3 பேர் உட்பட 35 உடனடியாக அந்த பகுதிகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார். மேலும் மன்னார் பகுதியிலிருந்து வெளிமாவட்டத்துக்கான பேருந்து சேவைகளும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் புத்தளம் – ஆராச்சிகட்டுவ, அடிப்பலயில் 17 வயதுடைய உயர்தர மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த மாணவன் இறுதிவாரத்தில் கம்பஹாவில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *