கொரோனா கால நிலையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்களுக்கான விலைக்குறைப்பு !

தற்போதைய வாழ்க்கை செலவு மற்றும் கொவிட் 19 நிலைமையை கருத்திற்கொண்டு பருப்பு, ரின் மீன், பெரிய வெங்காயம், சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரி நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பெரிய ரின் மீன் ஒன்று 200 ரூபாவிற்கும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 100 ரூபாவிற்கும், சீனி ஒரு கிலோ கிராம் 85 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அத்தியாவசிய பொருட்களை சதொச விற்பனை நிலையங்களில் 500 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்யும்போது, பருப்பு கிலோ ஒன்றை 150 ரூபா என்ற அடிப்படையில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், தெங்கு அபிவிருத்தி சபை, குருநாகல் பெருந்தோட்ட நிறுவனம், சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் என்பன கொழும்பு நகரத்திற்கான தேங்காய் விநியோகத்தை அதிகரித்துள்ளன. எனவே, நுகர்வோர், சதொச விற்பனை நிலையங்களில் நியாயமான விலையில் தேங்காயினை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *