“அரசியலமைப்பு என்பது கல்வெட்டு அல்ல, காலவோட்டத்துக்கேற்ப சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப அது மாற்றியமைக்கப்படவேண்டும் ” – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

“அரசியலமைப்பு என்பது கல்வெட்டு அல்ல, காலவோட்டத்துக்கேற்ப சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப அது மாற்றியமைக்கப்படவேண்டும் ” என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.தேர்தல் ஆணைக்குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவர் பக்கச்சார்பான முறையில் செயற்பட்டார். அவரிடம் சுயாதீனம் இருக்கவில்லை. தேர்தலை நடத்தவேண்டிய இடத்தில் இருந்துக்கொண்டு தேர்தலுக்கு எதிராக நீதிமன்றம் சென்றார். இவ்வாறு 19 இல் பல குறைப்பாடுகள் உள்ளன. அச்சட்டம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.

ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு இந்த நாட்டில் 42 வருடங்களாக அமுலில் உள்ளது. அரசியலமைப்பு என்பது கல்வெட்டு அல்ல, காலவோட்டத்துக்கேற்ப சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப அது மாற்றியமைக்கப்படவேண்டும்.

அந்தவகையில் புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 9 பேரடங்கிய நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அக்குழுவின் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. 6 மாதங்களுக்குள் வரைவு நகலை வழங்குவதாக குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். எனவே, 20 என்பது தற்காலிக ஏற்பாடு, அதனை ஒத்திவைக்கமுடியாது. அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான ஆரம்பமாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். முழுமையானதொரு அரசியலமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *