ருத்ராஜ் , ஜடேஜா அதிரடி ஆட்டம் – கொல்கத்தாவின் அடுத்த சுற்று கனவுக்கு தடை போட்டது சென்னை !

ஐ.பி.எல். தொடரின் 49-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நேற்று அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் எம்.எஸ்.டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஷுப்மான் கில் 26 ஓட்டங்களிலும், சுனில் நரைன் 7 ஓட்டங்களிலும் ரிங்கு சிங் 11 ஓட்டங்களிலும் வெளியேறினர். ஒரு பக்கம் இலக்குகள் விழ மறுமுனையில் நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார். அவர் 61 பந்தில் 87 ஓட்டங்களில் அவரும் வெளியேறினார். மோர்கன் 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தார்.  இறுதியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 பந்துப்பரிமாற்றங்களில் 5 விக்கெட்டுக்கு 172 ஓட்டங்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு
173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக  ஷேன் வாட்சன், ருத்ராஜ் கெயிக்வாட் ஆகியோர் இறங்கினர்.
இருவரும் அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 50 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், வாட்சன் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராயுடு 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  கெயிக்வாட் இம்முறையும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். டோனி ஒரு ஓட்டமெடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து சாம் கர்ரன் களம் இறங்கினார். சிறப்பாக ஆடிய கெயிக்வாட் 72 ஓட்டங்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜடேஜா இறங்கினார். ஜடேஜாவும், சாம் கர்ரனும் பொறுப்புடன் ஆடி சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதிப் பந்தில் ஜடேஜா சிக்சர் அடிக்க சென்னை அணி 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா 31 ஓட்டங்களும், சாம் கர்ரன் 13 ஓட்டங்களும் அடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்தனர். இது சென்னை அணியின் 5வது வெற்றி ஆகும்.
கொல்கத்தா சார்பில் பாட் கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *