“நாட்டை முடக்கும் தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கமுடியாது. அதனை சுகாதார அமைச்சுதான் தீர்மானிக்கவேண்டும்” – அமைச்சர் நாமல் ராஜபக்ச

“நாட்டை முடக்கும் தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கமுடியாது. அதனை சுகாதார அமைச்சுதான் தீர்மானிக்கவேண்டும்” என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (09.11.2020) வடக்கிற்கு வருகை தந்திருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ச , வவுனியாவில்  இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தென்பகுதியில் இருந்து வட பகுதிக்கு வருகின்ற அமைச்சர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகின்ற அதேவேளை நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் கொரோனா இருந்தது. அவர்கள் எங்களைவிட மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். ஆனாலும் இப்போது அவர்கள் வாழ்க்கை முன்னேறிக்கொண்டு தான் செல்கிறது. நாங்களும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.

பொதுமக்களோ, சுகாதார தரப்பினரோ பொருளாதாரம் முடங்குவதை விரும்பவில்லை. நாட்டை முடக்கும் தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கமுடியாது. அதனை சுகாதார அமைச்சுதான் தீர்மானிக்கவேண்டும். அவர்கள் வழங்கும் விடயங்களை வைத்துக்கொண்டுதான் அரசாங்கம் முடிவெடுக்கும்.

ஆனால், பொருளாதாரத்தை முடக்குவதுதான் எதிர்க்கட்சியினரின் நோக்கமாக இருக்கிறது. நாடு முடக்கப்பட்டாலும் அவர்கள் வெளியில் நடமாடுவார்கள். அவர்கள் கருமங்களை அவர்கள் செய்வார்கள். இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் அதை விரும்பவில்லை. பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லவே நாங்கள் விரும்புகிறோம்” எனத தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *