“கொரோனா தொற்றைத் தடுத்து மக்களை பாதுகாத்து கிராமிய பொருளாதாரத்தை வளர்தெடுப்பதே எங்கள் நோக்கம்” – சிவநேசதுரை சந்திரகாந்தன்

“கொரோனா தொற்றைத் தடுத்து மக்களை பாதுகாத்து கிராமிய பொருளாதாரத்தை வளர்தெடுப்பதே எங்கள் நோக்கம்”  என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருக்கான காரியாலயத்தை மாவட்ட செயலகத்தில் இன்று (12.11.2020) திறந்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் ,   தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்   சிவநேசதுரை சந்திரகாந்தனால் திறந்து வைக்கப்பட்டது. தென் பின்  கடமைகளை பெறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

இது பற்றி அவர் தெரிவித்ததாவது,

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன். இந்த இடத்திற்கு வருவதற்கு பெரும் பங்காற்றிய எனது மக்களுக்கு நன்றி. தேர்தல் காலங்களில் மக்களிடம் அபிவருத்த்தி செய்து தருவாக வாக்குறுதியளித்து தான் இந்த இடத்துக்கு வந்திருக்கின்றோம்

தற்போது உலகலாவிய ரீதியில் சவாலாக இருக்கின்ற கொரோனா மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வந்திருக்கின்றது. இந்த விடயங்களை அரச கொள்கையின் அடிப்படையில் கையாண்டு சாதாரண மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் அவர்களுடைய உற்பத்தியை அதிகரிக்க கூடிய விடயங்களையும் எப்படி முன்னெடுப்பது என்ற பொதுவான கொள்கைத் திட்டத்திற்கு உழைக்கவேணடும் என்பது எனது எதிர்பார்ப்பு.

அந்த அடிப்படையில் கொரோனா தொற்றைத் தடுத்து மக்களை பாதுகாத்துக்கொண்டு அதனோடு எங்களுடைய கிராமிய பொருளாதாரத்தை வளர்தெடுப்பது எங்கள் நோக்கம் அந்த திட்டத்திற்கு அனைவரது ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன் . நீண்ட காலமாக நான் நிர்வாகத்துடன் தொடர்பு இல்லாத காரணத்தால் இன்று கடமைகளை பெறுப்பேற்ற உடன் நிலமைகளை அவதானித்துக் கொண்டு 13 ம் திகதி பெரும் விமர்சனத்தில் மத்தியில் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தை நடாத்தவுள்ளோம்.

அந்த கூட்டத்தில் முடிந்த வரை 2021 ம் ஆண்டிற்கான செயற்பாடுகளையும் இப்போது இருக்கின்ற மக்களுக்கு உடனடி தேவையான விடயங்களை அவதானித்து அதனை முடித்து கொடுப்பதற்கான திட்டங்களை வகுப்போம் என தெரிவித்துள்ளார் .

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  கணபதிப்பிள்ளை கருணாகரன் , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் , சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் மற்றும் கட்சி முக்கிய உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *