“தமிழீழ விடுதலைப் புலிகளை கொழும்புக்கு அழைத்து வந்து ஜனாதிபதி கோட்டாபாயரைாஜபக்ஷவை கொலை செய்ய முற்பட்ட அமைச்சர்” – பாராளுமன்றில் ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு!

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை படுகொலை செய்வதற்காக கொழும்புக்கு அழைத்து வந்தவர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தான் என்று பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து விவாதம் பாராளுமன்றில் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்திற்கு 2 மணிநேரம் வழங்கப்பட்டுள்ள போதிலும் மேலுமொரு மணித்தியாலம் வழங்குமாறு எதிர்கட்சியினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஆளுந்தரப்பு நிராகரித்தது.

இதன்போது எழுந்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துமோதலிலே ராஜித எம்.பி மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *