கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் துப்பரவு பணிகளில் ஈடுபட்ட சிவஞானம் சிறிதரன் மீது  பொலிஸார் வழக்கு பதிவு !

அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி யுத்தத்தில் உயிர் நீத்த வீரர்களை நினைவு கூறும் நாள் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ் மக்களினால்  மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அதனை முன்னிட்டு இன்று (15.11.2020) காலை, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் துப்பரவு பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையிலும் அப்பகுதி மக்களுடைய இணைவிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, குறித்த சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், துப்பரவு பணிக்கு அனுமதி வழங்கியது யார்?  என வினவியதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மீது  வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துப்பரவு பணிகளில் மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.  குறித்த துயிலுமில்லத்தை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ள மக்களின் விபரங்களை கிளிநொச்சி காவல்துறையினர் பெற்றுச்சென்றுள்ளதாக வும் தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை இம்முறை மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கப்படுமா? என்பது தொடர்பில் இதுவரை எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .

முன்னதாக மாவீரர் தினத்தை உணர்வு ரீதியாக அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களுக்கு சிவஞானம் சிறிதரன் கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *