இலங்கையில் வீதிவிபத்துக்களால் வருடத்துக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி !

இலங்கையில் தினமும் வீதி விபத்துக்களால் 5 தொடக்கம் 10 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளரான பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஊடகங்களிடம் நேற்று வீதிப்போக்குவரத்து விபத்துக்கள் தொடர்பாக பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்படி வருடாந்தம் வீதி விபத்துக்களால் 3 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வீதி விபத்துக்களால் 15 ஆயிரம் பேர் அங்கவீனர்களாகின்றனர் என்றும், 20 ஆயிரம் பேர் காயமடைகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *