முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல் பாடல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில் இளைஞர் கைது !

தனது முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல் பாடல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை திருகோணமலை சம்பூர் பகுதியில் வைத்து தாம் கைது செய்துள்ளதாக சம்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு  (27.11.2020) இந்தச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சம்பூர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் எனவும் சம்பூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய முகநூல் ஊடாக மாவீரர்களை நினைவு கூர்ந்து பாடல்களை பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காவல்துறை நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் குறித்த இளைஞனை மூதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சம்பூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வருடம் சமூக வலைத்தளங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றிய தகவல்களை பகிர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *