“புலிகள் அழிய வேண்டும் என தமிழ்தலைவர்கள் எண்ணினர். அதை காட்டிக்கொள்ளாது, புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள், சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றெல்லாம் கதை விட்டனர்” – பாராளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா !

“புலிகள் அழிய வேண்டும் என தமிழ்தலைவர்கள் எண்ணினர். அதை காட்டிக்கொள்ளாது, புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள், சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றெல்லாம் கதை விட்டனர்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற 2020-2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் இறுதி நாள் அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

முன்னைய அரசினை போலன்றி ஜனாதிபதி கோட்டாபாஜராஜபக்ஷவின் அரசு மக்களுடைய பிரச்சினையை தீர்த்து வைப்பதுடன் நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்டுள்ளது. ஆனால் போலித்தமிழ்தேசியம் பேசுபவர்கள் மக்களுடைய பிரச்சினைகளை வேறுபக்கம் திசை திருப்பிவிடுகின்றனர்.

இந்த போலித்தேசியவாதிகள் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி வாக்குகளை சேகரித்து விட்டு மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்காது மக்களுடைய பிரச்சினைகளை இன்னும் அதிகரிக்கின்றனர். புரவி புயல் வந்து போய்விட்டது. ஆனால் இந்த போலித்தமிழ்தேசியவாதிகளின் பிறவிக்குணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இறுதி யுத்தத்தின் போது அழிவு ஏற்படக்கூடாது என்ற எனது மனிதாபிமான அடிப்படையில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசுவோம் வருங்கள் என நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஏனைய தமிழ்த் தரப்பை அழைத்த போது, அவர்கள் அதற்கு இணங்கியிருக்கவில்லை

புலிகள் அமைப்பு அழிய வேண்டும் என்ற மனோ நிலையிலேயே இருந்தார்கள். அதை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாது, புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள் நாற்பதாயிரம் சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றெல்லாம் கதை விட்டுக்கொண்டு அழிவுக்கு துணை போனார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.“புலிகள் அழிய வேண்டும் என்ற மனோநிலையிலிருந்த தமிழ்தலைவர்கள் அதை காட்டிக்கொள்ளாது, புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள், சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றெல்லாம் கதை விட்டனர்”

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *