சாதி ஒழிப்புக்காக கவி பாடிய மகாகவி பாரதியாரின் 138வது பிறந்ததின நினைவுநாள் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு !

இந்தியாவின் புரட்சிக்கவிஞரும் கவிதை மொழிநடையில் தமிழ்நாட்டில் சமூக மாற்றத்துக்காக பாடுபட்டவருமான மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138 வது பிறந்த தினம் இன்றாகும்.

இதனை முன்னிட்டு மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138 வது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில்  இன்று இடம்பெற்றுள்ளது.

யாழில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் நல்லூர் ஆலயத்திற்கு பின்பக்க வீதியிலுள்ள பாரதியார் நினைவுச் சிலை அடியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பாரதியார் நினைவுச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் யாழ் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னால்ட், மாவை.சேனாதிராஜா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *