மட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சினை – தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரமுகர்கள் கூட்டாக கள விஜயம் !

இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் மேய்ச்சல் தரை இன்றி தவித்து வருவதாக கூறி மட்டக்களப்பு மயிலந்தனை மடு ,மாதவனை  மடு பண்ணையாளர்கள் கடந்த இரு மாத காலங்களாக பல்வேறுபட்ட கோரிக்கை முன்னிறுத்தி போராட்டங்களை மேற்கொண்டு வந்திருந்தனர்.

மட்டக்களப்பு மயிலந்தனை மடு ,மாதவனை  மடு மேய்ச்சல் தரை விடயம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரமுகர்கள் கூட்டாக கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அனுராதா ஜகம்பத் சிங்கள குடியேற்றத்தை ஆதரித்ததாக   பண்ணையாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா. சாணக்கியன்,தவராஜா கலையரசன்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் ,  ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , கோவிந்தன் கருணாகரன் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் உள்ளிட்ட இளைஞரணியினர்களும் குறித்த இடத்தில் வருகை தந்திருந்தனர்.

இங்கு குறைகளை எடுத்துரைத்த பண்ணையாளர்கள்
மயிலந்தனை  மடு பண்ணையார்கள் சார்பான வழக்காளிகளாக  மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இரா.சாணக்கியன் , கோவிந்தன் கருணாகரன் இருவரையும்  சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஊடாக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக குறிப்பிட்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *