இறந்த முஸ்லீம்களின் உடல்கள் எரிக்கப்படுவதை தடைசெய்யுமாறு கூறி மன்னாரில் விழிப்புணர்வு போராட்டம்!  

சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்குமாறுக் கோரி மன்னாரில் அமைதியான முறையில் விழிர்ப்புணர்வு போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் (மெசிடோ) ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக குறித்த விழிர்ப்புணர்வு போராட்டம் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (புதன்கிழமை) காலை ஒன்று கூடிய மக்கள் அமைதியான முறையில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்திற்கு மன்னாரின் இளம் சட்டத்தரணிகள் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்க கோரியும் உயிருடன் இருக்கின்றபோது உடலுக்கு கொடுக்கின்ற மதிப்பினை அவர்கள் மரணிக்கின்றபோது அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை விழிர்ப்புணர்வு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்தனர்.

மேலும் கொரோனா தொற்றால் இறந்த உடல்கள் தகனம் செய்யப்படுகின்றமை உறவினர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துகின்றது. எனவே உலக சுகாதார ஸ்தாபனத்தின் செயற்திட்டங்களை உள்வாங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து குறித்த விழிர்ப்புணர்வு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *