சுதந்திர இந்தியாவின் இலட்சியத்துக்கு சாதி, மத, பிராந்திய வேறுபாடுகள் பெரும் தடை- பாரத ஜனாதிபதி

republic-day.jpgநாட்டு நலன்களுக்காக தங்களை அர்ப்பணித்துச் செயற்படும் அனைத்து குடிமக்களையும் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ள இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் எதிரிகளைத் தோற்கடித்து இந்தியாவின் இறைமையைப் பாதுகாக்கப் போராடும் படை வீரர்களுக்கு தனது விசேட ஆசிர்வாதங்கள் உண்டாகட்டும் எனவும் கூறியுள்ளார். இந்தியாவின் அறுபதாவது குடியரசு தினம் நேற்றுக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இந்தியாவின் முக்கிய நகரங்கள், இடங்கள் என்பவற்றில் கடுமையான பாதுகாப்புகள் போடப்பட்டன. நாட்டின் ஜனாதிபதியென்ற வகையில் பிரதீபா பட்டீல் குடிமக்களுக்கு விசேட உரையாற்றினார். அதில் கூறியதாவது, நாட் டின் அறுபது வருடகால குடியரசு வரலாற்றில் நாம் சாதித்தவை ஏராளம். நீதி சுதந்திரம், சமத்துவம் என்கின்ற தார்மீகப் பொறுப்பில் இந்தியா தனது பயணத்தைத் தொடர்கின்றது. அன்னியர்களிடமிருந்து பெறப்பட்ட சுதந்திரத்தின் பூரண வடிவம்தான் குடியரசு தினம்.

வெளிநாட்டாரின் ஒருவித அழுத்தங்களின்றி முடிவெடுக்கவும், செயலாற்றவும் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்தைக் கூறுபோடவும், ஒற்றுமைக்கு உலைவைக்கவும் பல்வேறு கோணங்களிலும் வடிவங்களிலும் சதி முயற்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. இவற்றை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் படையினரை இந்தியர்கள் மறக்க முடி யாது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாய் மண்ணுக்கும் பெருமை தேடித்தரும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தும் அரசுகள் எங்கிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

அயல் நாடுகளில் அமைதியின்மையைத் தூண்டி உள்ளூர் அரசியல் தேவைகளை நிறைவேற்ற எண்ணும் அரசுகளையோ, அமைப்புகளையோ ஜனநாயகவாதிகள் என்றழைக்க முடியாது. மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக் குதலில் அரசு சாராத தனி நபர்களுக்கே தொடர்பு உள்ளது என்றும் இதில் தங்களை குற்றஞ்சாட்ட முடியாது என்றும் கூறி கைகழுவிக் கொள்கிறது பாகிஸ்தான். அதன் இந்த நிலை ஏற்கத்தக்கதல்ல. உலகின் ஸ்திரத்தன்மைக்கு உலைவைப்வதாக உள்ளது பயங்கரவாதம். எனவே பயங்கரவாதத்தை இருக்கும் இடம் தெரியாமல் விரட்ட உலக நாடுகள் ஒன் றுபட்டு நின்று தெளிவான நடவடிக் கையை எடுக்க வேண்டும்.

பயங்கரவாதத்தின் மையம் நிலைகொண்டுள்ள பிராந்தியத்தில் இந்தியா அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாத கொடூரங்களுக்கு இந்தியா ஆளாகி வருகிறது. பயங்கரவாதம், வன்முறைகள், இயற்கைப் பேரிடர்கள், கச்சா எண்ணெய் மற்றும் உணவுப் பொருள் விலையேற்றம், உலகப் பொருளாதாரத் தேக்க நிலை என கடந்த ஓராண்டில் நாட்டைத் துண்டாடும் நோக்கத்தில் சில சக்திகள் செயற் படுகின்றன. அவற்றை மக்கள் புரிந்து கொண்டு ஒரே இந்தியா, நாம் இந்தியர் என்ற கண்ணோட்டத்தில் செயற்பட வேண் டும். பிராந்திய, மத, சாதி கண்ணோட்டம் நம்மிடம் இருக்கக் கூடாது. சுதந்திர இந்தியா என்ற இலட்சியத்தை நோக்கி நாம் பயணம் மேற்கொண்டுள்ளோம். அந்த இலக்கை அடைய நாம் கையாளும் கொள்கைகளுக்கு பிராந்திய, மத, சாதி கண்ணோட்டம் எதிரானவை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    சுகந்திர நாட்டில் சுகந்திர கொடி மிகவும் பலத்த பாதுகாப்புடன் எந்தவித அசம்பாவிதமும் நடக்காம்ல் ஏற்றபட்டது.

    Reply