கருணாநிதியுடன் போனில் பிரணாப் ஆலோசனை

pranab.jpgமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். இந்தத் தகவலை இன்று காலை சட்டசபையில் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை பிரச்சனை குறித்து கருணாநிதி, பிரணாப் முகர்ஜியிடம் பேசியதாகவும், அதற்கு பிரணாப் முகர்ஜி, இன்று மாலை தான் இலங்கைக்குச் செல்வதாக தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இலங்கை பயணம் குறித்த அறிவிப்பையும் சட்டசபையில் அன்பழகன் வெளியிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *