கம்பளையில் திடீர் மண்சரிவு- 44 வீடுகள் பாதிப்பு;

28-01.jpgகம்பளை தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கம்பளவெல முஸ்லிம் கிராமத்தில் மகாவலி கங்கை ஓரமாக இடம்பெற்ற மண்சரிவில் 44 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்றுக் காலை இடம் பெற்ற இந்த ஆற்றங்கரையோர மண்சரிவு காரணமாக 44 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அக் குடும்பங்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு கம்பொலவெல சிங்கள கனிஷ்ட பாடசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்ற அமைச்சர் டி. எம். ஜயரத்ன ஸ்தலத்துக்கு விரைந்து தற்காலிகமாக பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு உலர் உணவுகளை வழங்க துரித நடவடிக்கை எடுத்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைவரும் கம்பொலவெல முஸ்லிம் பள்ளி வாசல் சூழலில் வசிப்பவர்களாவர். கம்பொலவெல பாதையும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் போக்குவரத்திற்காக மாற்று வழியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மகாவலி கங்கை ஓரமாக உள்ள நிலப்பரப்பில் இந்த வீடுகள் அமைந்திருப்பதால் சட்டத்தையும் மீறிய நிலையில் பலர் மணல் அகழ்வு வேலையில் ஈடுபட்டதன் எதிரொலியாகவே இந்த மண்சரிவு ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வீடுகளை இழந்தவர்களுக்கு அப்பிரதேசத்தின் அருகே காணிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஜயரட்ன தெரிவித்தார். இந்த அனர்த்தத்தைக் கேள்விப்பட்டதும் மின்சக்தி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேயும் அவ்விடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *