இணக்கப்பாடில்லாத முக்கிய சில விடயங்களுக்கு அடுத்த சர்வகட்சி மாநாட்டில் தீர்வு எட்டப்படும்?

நாட்டின் முக்கிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினர் 99 வீதமான இணக்கப்பாட்டை எட்டியுள்ள நிலையில் இணக்கப்பாடு இல்லாத முக்கிய ஒருசில விடயங்களை அடுத்த சர்வகட்சி மாகாநாட்டின் மூலம் எட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் 104 ஆவது கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றபோது இதுவரை காணப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்த அறிக்கை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.  இந்நிலையில் இணக்கம் காணப்படாத ஏனைய ஒரு வீதத்தையும் சர்வகட்சி மகாநாட்டின் மூலம் இணக்கப்பாடு எட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் 105 ஆவது கூட்டத்தை 2 அல்லது 3 ஆம் திகதியில் நடத்த இருந்த போதிலும் அத்தினங்களில் கண்காட்சியொன்று இடம் பெறவுள்ளதால் எதிர்வரும் 10 ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *