யாழ்.பல்கலைகழக நினைவுத்தூபி இடிப்பு – தமிழக முதலமைச்சர் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் !

யாழ்பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் எந்தத் தேர்தலாக இருந்தாலும், எந்த சமயத்திலும் அதிமுக  தலைமையில்தான் கூட்டணி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம், cm ...

“இலங்கை முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப்போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுதூண் இரவோடிரவாக அழிக்கப்பட்டுள்ளமை பேரதிர்ச்சி தருகின்றது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
உலகதமிழர்களை பெரும்வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் மாபாதக செயலுக்கும் அதற்கு துணைபோன யாழ்பல்கலைகழக துணைவேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என எடப்பாடி பழனிச்சாமி குறிபபிட்டுள்ளார்.

இதே வேளை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்புக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணும் இடிக்கப்பட்டதற்கு எனது கடும் கண்டனங்கள்! பிரதமர் மோடி இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திட வேண்டும்! இது உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு!” என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், “ஈழப்பேரழிவை சந்தித்து நிற்கும் தமிழர்களை சீண்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்து தகர்க்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது. இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களின் தொடர் இனஅழிப்பின் நடவடிக்கையாகத்தான் இதைக் கருதவேண்டியிருக்கிறது” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *