“நாங்கள் தொடர்ந்தும் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற எங்கள் கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்குவோம்” – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு இந்திய பிரதமர் மோடி பதில் !

“நாங்கள் தொடர்ந்தும் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற எங்கள் கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்குவோம்” என இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதிக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் டுவிட்டர் செய்திக்கு அளித்துள்ள பதில் செய்தியில் இந்திய பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளமைக்காகவும் நட்புறவு அயல்நாடுகள் குறித்த தாராள மனப்பான்மைக்காகவும் இலங்கை ஜனாதிபதி இந்திய ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதற்கு தனது டுவிட்டர் செய்தியில் பதிலளித்துள்ள இந்திய பிரதமர்

“நன்றி கோத்தபாய ராஜபக்ச அவர்களே நோய்பரவலிற்கு எதிராக கூட்டாக போராடும் அதேவேளை நாங்கள் தொடர்ந்தும் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற எங்கள் கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய அரசாங்கம் அயல்நாடுகளிற்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிற்கும் மில்லியன் டோஸ்களிற்கு அதிகமான கொரோனா வைரஸ் மருந்தினை வழங்குவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றது” என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *