“அரசியல் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள், புதிய அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டிய தருணம் தற்போது மலர்ந்துள்ளது” – எம்.ஏ.சுமந்திரன்

“அரசியல் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள், புதிய அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டிய தருணம் தற்போது மலர்ந்துள்ளது” என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (26.01.2021), தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

இரு சமூகங்களும் ஒன்றிணைந்து தமக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை மறந்து பயணிக்க வேண்டியது தற்போதைய சூழ்நிலையில் அவசியம். அதற்கேற்ப திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் .

அத்துடன் ஜனாஸா அடக்கம் தொடர்பாக குரல்கொடுத்த கஜேந்திரன், சாணக்கியன் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி எனவும் அவர் கூறினார்.

இதேவேளை முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளதாவது, “முன்னைய காலங்களில் சுமந்திரன், மனோ கணேசன், விக்ரமபாகு கருணாரட்ன உட்பட நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வாராந்த செய்தியாளர்கள் சந்திப்புகளை நடாத்தி வந்ததோடு, சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி வந்தோம்.

இந்நிலையில் தற்போது அதனை மீண்டும் புதுப்பித்து, இரு சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்த்து அரசியல் ரீதியிலான ஒற்றுமையுடன் ஒரேயணியாக தேர்தலுக்கு முகங்கொடுக்கத் தயாராக வேண்டியது அவசியம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *