“ஜனநாயகம் மனித உரிமைகள் குறித்து எவரும் கற்றுக்கொடுக்கவேண்டிய நிலையில் இலங்கை இல்லை” – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே

ஜனநாயகம் மனித உரிமைகள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து எவரும் கற்றுக்கொடுக்கவேண்டிய நிலையில் இலங்கை இல்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இவை கடந்த வருடம் அழிக்கப்பட்டுவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிலோன் டுடேயிற்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“மீறல்களில் ஈடுபடுபவர்களையும் வன்முறைகளையும் ஏனைய நாடுகளிலேயே காண்கின்றோம் இலங்கையில் இல்லை.

அமெரிக்கா மீண்டும் மனித உரிமை பேரவையில் இணைந்துகொள்ளக்கூடும். அமெரிக்கா உலகின் மனித உரிமைகள் குறித்து நேர்மையான அக்கறையை கொண்டிருந்தால் ,இலங்கை மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடில்லை. நாட்டில் தற்போத அமைதி நிலவுகின்றது என்பதை நாங்கள் நினைவுபடுத்தவேண்டியிருக்கும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பைடனின் வெற்றி முக்கியமானது என்பதை வலியுறுத்தியுள்ள அதேவேளை பைடன் தனது நாட்டில் ஒழுங்கை ஏற்படுத்தவேண்டிய நிலையில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மீள ஏற்படுத்தவேண்டிய நிலையில் காணப்படுகின்றார்.

இலங்கை ஒரு வன்முறை நாடில்லை. இங்கு வன்முறைகள் இடம்பெறவில்லை ஏனைய நாடுகளில் இடம்பெறும் சிறிய சம்பவங்களே இடம்பெறுகின்றன .இலங்கையில் இனமத ஐக்கியம் நிலவுகின்றது இதனை நாங்கள் ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராகவுள்ளோம்.” எனவும் தெரிவித்துள்ளார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *