“தொழிலாளர் சம்பளமாக 1,000 ரூபா கொடுப்பனவு கிடைக்காது விடின் போராட்டம் வெடிக்கும்” – வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி சம்பளம் வழங்கும்போது 1,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதத்திற்கான சம்பளத்தில், நாளாந்த சம்பளமாக 1,000 ரூபா கணக்கிடப்படாவிடின் பாரிய தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *