அரசாங்கத்தின் அறிவிப்பை புலிகள் நிராகரிப்பு

வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் சிக்குண்டுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்குப் பாதுகாப்பான வழி அமைத்துக் கொடுக்கப்படும் எனக் குறிப்பிட்டு, அடுத்த 48 மணி நேரத்துக்குள் அவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கும்படி புலிகள் இயக்கத்துக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை மாலையில் பகிரங்க அறிக்கை மூலம் விடுத்தகோரிக்கையைப் புலிகள் இயக்கம் அடியோடு நிராகரித்து விட்டது.

இந்த அறிவிப்பு உலகத்தை ஏமாற்றும் சூழ்ச்சி எனவும் புலிகள் விமர்சித்திருக்கின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு “இரண்டு நாள் போர்நிறுத்தப் பிரகடனம்” என அர்த்தப்படுத்தப்படும் பின்னணியில், நேற்றும் அரசுப் படைகளின் கொடூரமான தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர்வரை கொல்லப்பட்டு அறுபதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்றும் புலிகள் குற்றம் சுமத்தினர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *