இராணுவ விமான நிலையம் முற்றுகை. -கொளத்தூர் மணி உட்பட 250 பேர் கைது

kolathur_mani.jpgதஞ்சை விமானப் படைத்தளத்தில் இருந்து இலங்கை ராணுவத்திற்கு போர்க்கருவிகள் அனுப்பப்படுவதாகக் கூறி தமிழர் ஒருங்கிணைப்பு குழு “விமானப் படைத்தள முற்றுகைப் போராட்டம்” நடத்த அழைப்பு விடுத்திருந்தது.  நேற்று (31) தேசிய பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் தஞ்சை.மணியரசன், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தமிழுணர்வாளர்கள் விமான தளத்தை நோக்கி ஊர்வலம் போனார்கள்.

விமான நிலையத்திற்கு முன்பாக அவர்களை மறித்த தஞ்சை மாவட்ட காவல்துறை போராட்ட குழுவை அதற்கு மேல் செல்ல விடாமல் தடுப்பு வைத்து தடுத்தனர்.தடையை மீறி விமான நிலையத்தை நோக்கி சென்ற குழவினரை போலிஸார் மீண்டும் தடுத்ததால் அங்கேயே உட்கார்ந்து விட்டார்கள். அக்கூட்டத்தில் மணியரசன் பேசும்போது, தமிழர்களை கொல்லும் இந்திய அரசே உடனே போரை நிறுத்து தமிழர்களை கொல்லாதே, ஈழதமிழர்களை கொல்ல ஆயுதம் அனுப்பிய இந்த விமான படைதளத்தை உடனே மூட வேண்டும். இல்லையேல் பொதுமக்களே இந்த விமான படை தளத்தை மூடுவார்கள் என எச்சரித்தார். மணியரசன் பேசும்போதே போலிஸார் அதை தடுக்க போராட்ட குழுவுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

உடனே போராட்ட குழவினர் மணியரசன், கொளத்தூர் மணி உட்பட 250க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து வல்லத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.  நேற்று மாலை அவர்களில் 244 பேரை ரிமாண்ட் செய்து திருச்சி சிறைக்கு காவல்துறை அனுப்பியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • SUDA
    SUDA

    //அக்கூட்டத்தில் மணியரசன் பேசும்போது தமிழர்களை கொல்லும் இந்திய அரசே உடனே போரை நிறுத்து தமிழர்களை கொல்லாதே ஈழதமிழர்களை கொல்ல ஆயுதம் அனுப்பிய இந்த விமான படைதளத்தை உடனே மூட வேண்டும். இல்லையேல் பொதுமக்களே இந்த விமான படை தளத்தை மூடுவார்கள் என எச்சரித்தார்.//

    WHAT A JOKE? HA.. HA..H……HA……HAA

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இது Thatstamilஇதழில் வெளிவந்த பின்னூட்டமொன்று. இத்தகவல் புறந் தள்ளக் கூடிய தகவலாக எனக்குப் படவில்லை. அதனால் தான் இதை இங்கே இணைக்கின்றேன்.

    “வைகோ உட்பட சில அரசியல் வாதிகள் முத்துக்குமரன் என்ற அப்பாவியை தமது அரசியல் இலாபங்களுக்காக தீக்குளிக்க வைத்துள்ளனர். இதுதான் உண்மை. முத்தக்குமரன் இறுதியாக வசித்து வந்த இடம் கொளத்தூர் அதாவது கொளத்தூர் மணியின் இடம். அதுபோல் முத்துகுமரன் பணியாற்றிய “ பெண்ணே நீ “ பத்திரிகை பாமக நிறுவனர் இராமதாசினுடையது. மிகுதியை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகின்றேன். எப்படியெல்லாம் அப்பாவிகளைக் கொன்று இவர்கள் அரசியல் நடத்துகின்றார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும்”.

    Reply
  • palli
    palli

    மக்கள் தொலைகாட்ச்சி ராமதாஸ் மகள் பினாமிதான். இதன் உரிமையாளர் புலிகள்தான். இது பல புலம்பெயர் தமிழருக்கு தெரியகூடும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பார்த்திபன் இதுமுழுமையான உண்மையே! வன்னி போய் கரும்புலியாக சத்திபிரமானம் எடுத்தவர் என்ற சந்தேகமும் வலுப்பெற்று வருகிறது. இன்னும் சிலகாலங்களில் தெளிவான உண்மைகள் வெளிவரலாம்.

    Reply
  • palli
    palli

    சந்திரா ராஜா இது உமக்கே ரெம்ப அதிகமா படவில்லையா??
    சிலரது பின்னோட்டமே அவர்கள் யார் என்பதை உறுதி செய்கிறது. இது சந்திரராஜாவுக்கு மட்டுமல்ல பல்லிக்கும்தான்.

    Reply
  • Maran
    Maran

    Itis really a Nice Joke… Parthiban…”Kolathur” Mani — This ia a Village situated near Meytur – Salem District… Muthukumaran was from Kolathur that is Situated at outskirts of chennei…Both are totally Different…Come with actual detail before writing..

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நண்பர் பல்லி! தமிழர் வாழ்வு வழங்களை(அறிவு உட்பட) சூறையாடி ஒரு இனத்தையே ஒட்டாண்டியாக்கி தமிழ்மக்களின் உரிமைகளை பெறமுடியாமல் அதை பயங்கரவாதமாக்கி ஒரு குற்றஉணர்வுள்ள இனமாக எம்மை புலிகள் உலகில் உலவ விட்டுள்ளார்கள். இப்படியிருக்கையில் இன்று வன்னியில்லுள்ள மக்களை தம் பிடியில்லிருந்து விடுவார்கள்களானால் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் சொல்லாமல் எப்படியிருக்க முடியும்?.
    யாரும் எவரும் எத்தனைபெயரிலும் வந்து போகட்டும். அவர்கள் சொல்லும் கருத்தும் சரியாகவோ நியாயமானதாகவோ இருந்தால் அங்கீகரிக மறுத்தால் நாம் தான் பலம் குறைந்த மனிதராக வெளிப்படுத்திக் கொள்வோம்.

    Reply