“அரசாங்கத்திலிருந்து நாங்கள் வெளியேறுவது சூரியன் மேற்கில் உதயமாவதை போன்றது அது ஒரு போதும் நடக்காது” என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விமல்வீரவன்சவின் வீட்டில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது என்றால் அது மேற்கில் சூரியன் உதயமாவதை போன்றது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் நாங்கள் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே முயற்சிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
நாலாம் பக்கத்திலும் அரசாங்கத்திற்கு எதிரான சதிகாரர்கள் காணப்படுகின்றனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.