ஏப்ரல்-21 தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கை குறித்த விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் தற்போது மட்டுமல்லாது எதிர்காலத்திலும் ஏற்படவிருக்கும் அச்சுறுத்தல்களை இனம் கண்டு அவற்றை தடுக்கும் பொருட்டு அதன் ஓர் அங்கமாக புர்கா அணிவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.