வஹாபிசம் மற்றும் ஜிகாத்தினை ஊக்குவித்த சந்தேகத்தில் ஒருவர் கைது !

இலங்கையில் ஜிகாத் கொள்கையை பரப்பி ஊக்குவித்தார் என்ற சந்தேகத்தில் நபர் ஒருவர் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜமாத் -இ- இஸ்லாமி என்ற அமைப்பின் தலைவரான மாவன்னலயை சேர்ந்த ரசீத் அக்தர் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெமட்டகொடையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவரை கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர் ஜமாத் – இ- இஸ்லாமி அமைப்பின் வெளியீடுகளில் வஹாபிசம் மற்றும் ஜிகாத்தினை ஊக்குவிக்கும் கட்டுரைகளை எழுதியுள்ளார் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார். சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் வீடியோக்களை ஆராய்ந்துவருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *