பிரித்தானிய பாடசாலைகளில் இடம்பெற்ற பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பாக 8000 குற்றச்சாட்டுக்கள் பதிவு !

பிரித்தானியாவில் பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான சாட்சியங்களை சேகரிக்கும் இணையதளத்தில் 8,000 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் மாணவர்களினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கற்பழிப்பு கலாச்சாரம் அனைத்து பாடசாலைகளிலும் ஒரு பிரச்சினையாக இருப்பதாக தெரிவித்து சோமா சாரா என்பவர் உருவாக்கிய இணையத்திலேயே குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த குற்றங்களை புரிந்தவர்களில் பலர் ஒரே பாடசாலையில் அல்லது ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயம் தொடர்பாக ஹெல்ப்லைன் அமைக்கப்படும் என்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *