“வெளிநாட்டு பேரவைகள் இலங்கையின் எதிர்காலம் குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை.” – கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

“வெளிநாட்டு பேரவைகள் இலங்கையின் எதிர்காலம் குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை.” என கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு இதனை தெரிவித்துள்ள அமைச்சர் பொதுமக்கள் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளங்கிக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் பேசிய அவர்,
சட்டங்களை உருவாக்குவது அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது முப்படையினரினதும் நியமனங்களை மேற்கொள்வது போன்றவற்றை முன்னெடுப்பதன் மூலம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையும் ஆணையாளரும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு அனுமதிக்கவேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் நாடாளுமன்றத்தின் பங்களிப்பு என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என மனித உரிமை கருதுகின்றது,என தெரிவித்துள்ள அமைச்சர் 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்து முப்படையினரையும் கைதுசெய்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கான திட்டம் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையை பயன்படுத்தி சில நாடுகள் தங்கள் நிகழ்ச்சி நிரலை பூர்த்தி செய்ய முயல்வதற்கு எதிராக கட்சி பேதங்களை மறந்து விட்டு அனைத்து தரப்பினரும் ஒன்றுபடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *