பாகிஸ்தானில் சீன தூதுவர் தங்கியிருந்த விடுதியில் குண்டுத்தாக்குதல் – 05 பேர் பலி !

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதியின் கார் நிறுத்துமிடப் பகுதியில் வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் வெடித்து சிதறியதில், 5 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர்.
சீன தூதர் உள்பட சீனாவின் உயர் மட்ட அதிகாரிகள் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவினர் இந்த நட்சத்திர விடுதியில் தான் தங்கியிருந்துள்ளனர். எனினும், குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் சீன தூதர் குறிப்பிட்ட நட்சத்திர விடுதியில் இல்லை என்று கூறப்படுகிறது.
இது ஒரு பயங்கரவாத செயல் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித் அகமது தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு நடந்த நட்சத்திர விடுதியில்  முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *