”கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற தயங்குவதே அதிகரிக்கும் உயிரிழப்புக்களுக்கு காரணம்.” – இலங்கை மருத்துவ சங்கம்

கொவிட் நோயாளிகள் மருத்துவமனைகளில் தங்களை அனுமதிப்பதற்கு தயங்குகின்றனர் இதன் காரணமாக நாட்டில் கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்மா குணரட்ண இதனை தெரிவித்துள்ளார்.
பலர் நிலைமை மோசமடைந்த பின்னரே மருத்துவமனைகளிற்கு செல்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ள அவர் , முன்கூட்டியே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது இவ்வாறான ஆபத்தைத் தடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னரே நோயாளிகள் மருத்துவமனைகளிற்குச் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *