குழந்தைப் போராளியின் மீதான கூட்டுப் பாலியல்வல்லுறவு: புளொட் – தீப்பொறி கொட்டியவர்களை காட்டிக்கொடுங்கள்!!! : த ஜெயபாலன்

பாலியல் வல்லுறவு என்பது மன்னிக்க முடியாதவொரு கொடும் குற்றம். ஆனாலும் இந்தக் கொடும் குற்றத்திற்கு ஆளான பெண்கள் சமூகத்தின் பழிச்சொல்லுக்கும் ஏளனத்திற்கும் பயந்து மௌனமாக்கப்படுகின்றனர். இது பாலியல் வன்கொடுமை செய்த ஆணைத் தப்பிக்க வைக்கின்றது. இதனால் இந்தக் கொடுமையயைப் புரிந்த ஆண்கள் எதிர்காலத்திலும் இவ்வாறான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம், தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரானதாக முன்னெடுக்கப்பட்ட போதும் அப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்ட பலர்: பெண்களை, ஏனைய சமூகத்தவர்களை, ஏனைய பிரதேசத்தவர்களை, ஏனைய மதத்தவர்களை ஒடுக்குபவர்களாகவும் மற்றையவர்கள் பற்றிய கழிவிரக்கம் அற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.

இவர்களை அரசியல் ரீதியில் வளம்படுத்தி மனித நேயர்களாக்குவதற்கான தேவையயை இயக்கங்கள் கொண்டிருக்கவலில்லை. அதற்கான கால அவகாசமும் அந்த இயக்கங்களுக்கு இருக்கவில்லை. சில அரசியல் வகுப்புகளினூடாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அடிப்படையில் பாரிய மாற்றங்கள் நிகழவில்லை. இது அனைத்து தமிழ் விடுதலை அமைப்புகளிலும் காணப்பட்ட ஒரு குணாம்சம். அதனால் தான் பெண்களுக்கு எதிரான அல்லது பெண்களை இரண்டாம் தரமாக எண்ணும் போக்கு, பாலியல் துன்புறுத்தல்கள், ஏனையவர்களுக்கு எதிரான வன்மம், சித்திரவதைகள், கொலைகள் சர்வ சாதாரணமாக தமிழீழ விடுதலை இயக்கங்களால் (குறிப்பாக புளொட் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், புலிகள் – தமிழீழ விடுதலைப் புலிகள், ரெலோ – தமிழீழ விடுதலை இயக்கம்) மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எந்த விடுதலை இயக்கமும் விதிவிலக்காக இருக்கவில்லை.

2020 இல் கூட பிரித்தானியாவில் 118 பெண்கள், ஆண்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு குட்டித்தீவான இலங்கையில் 100,000 பேருக்கு 8 பாலியல் வல்லுறவு நடைபெறுகின்றது. ஒப்பீட்டளவில் இந்தியாவின் பாலியல் வல்லுறவு விகிதாசாரத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் விகிதாசாரம் நான்கு மடங்கு அதிகம். இந்தியாவில் 100,000 பேருக்கு இருவரே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர். பாலியல் வல்லுறவு தொடர்பான மயையான விம்பங்களுக்குள் இருந்து நாம் வெளிவர வேண்டும்.

1980க்களின் நடுப்பகுதி, தமிழீழ விடுதலைப் போராட்டம் எழுச்சி கொண்டிருந்த காலம். அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணம் ‘பொடியளின்’ கைகளில் இருந்தது. புளொட், ரெலோ, புலி ஆகிய மூன்று பிரதான இயக்கங்களே ஆள் மற்றும் ஆயுத பலத்தில் முன்நின்றனர். புளொட் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளை அணிசேர்த்து மிகப்பலமான ஆளணி உடைய அமைப்பாக இருந்தது.

அவ்வமைப்பின் தலைமையின் எதேச்சதிகாரப் போக்கு, இராணுவக் கட்டமைப்பிற்கும் அரசியல் கட்டமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிளவு குழுவாதப் போக்கு என்பன விடுதலைக் கனவோடு அல்லது சாகசங்கள் நிகழ்த்த வந்த பலரையும் இயக்கத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்தது. இயக்கத்தை விட்டு வெளியேறுபவர்களை துரோகிகளாக கருதும் மனநிலை; தலைமைக்கு விசுவாசமான சிறுபிரிவினரிடம் இருந்தாலும்; பெரும்பாலானவர்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அவ்வாறான வெளியேற்றங்களை தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முயற்சிக்கவில்லை.

அவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேறாமல் இருந்ததற்கு முக்கிய காரணங்களில் தங்களை நம்பி இயக்கங்களுக்குள் வந்தவர்கள்; அல்லது தங்களால் இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்களைக் கைவிட்டுவிட்டு தாங்கள் மட்டும் தப்பிச் சென்றுவிட முடியாது; என்ற எண்ணப்பாடும் முக்கியமானது. அதனை இங்கு எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. மேலும், நாம் நம்பி வந்த இயக்கத்தை அதற்குள் போராடியே திருத்தலாம் என்ற நம்பிக்கையிலும் சிலர் இருந்தனர்.

அதனால் புளொட்டை விட்டு வெளியேறிய குறிப்பாக தீப்பொறிக் குழுவினர் அனைவரும் முற்போக்கானவர்கள் புரட்சியாளர்களும் அல்லர் புளொட்டை விட்டு வெளியேறாத அனைவரும் புளொட் தலைமையின் விசுவாசிகளும், துரோகத்தை சுமந்தவர்களும் அல்லர். ஆகவே புளொட்டில் இருந்து வெளியேறிய தீப்பொறிக் குழுவினரோ அல்லது வெளியேறாமலே இருந்த புளொட் அமைப்பினரோ சுத்தமான சுவாமிப்பிள்ளைகள் என்ற முடிவுக்கு யாரும் ஒரு தலைப்பட்சமாக வந்துவிடமுடியாது. இருதரப்பிலுமே அடிப்படை நேர்மையும் மனிதத்துவமும் உடையவர்களும் அற்றவர்களும் இருந்துள்ளனர். இந்தப் பின்னணியிலேயே புளொட்டின் 17 வயதேயான பெண் குழந்தைப் போராளியயை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சிலர் கூடியிருக்க வன்புணர்ந்த சம்பவத்தை நோக்க வேண்டும். இன்று அந்தப் பெண் போராளி எம்மத்தியில் இல்லை. அவருக்கு இழைக்கப்பட்ட மிகக் கொடிய குற்றத்தின் தாக்கத்தால் அவர் புலம்பெயர்ந்தும் தனது கொடிய நினைவுகளைவிட்டுப் புலன்பெயர முடியாமல் கொடூரத்திற்கு பிந்திய மனச்சிதைவுக்கு உள்ளாகி, இறுதியில் மரணம் அடைந்தார். 2011 மார்ச் 8 பெண்கள் தினத்தையொட்டி இச்சம்பத்தின் முக்கிய சாட்சியும் புளொட் அமைப்பின் மகளீர் அணியின் பொறுப்பாளராக இருந்தவருமான ஜெ ஜென்னி எழுதிய மூலக் கட்டுரையயையும் அதன் மீதான விவாதங்களையும் பார்க்க இவ்விணைப்பை அழுத்தவும்: https://www.padippakam.com/padippakam/document/EelamHistory/Janni/jnei04.pdf

இதில் உள்ள மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் இக்குற்றச்செயலை இழைத்த அக்குழுவினர் இன்றும் எம்மத்தியில் கௌரவத்தோடு வாழ்கின்றனர். அரசியல் செய்கின்றனர். முதலாளித்துவ சமூகமே சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டு ஏதோ யாருக்கோ நியாயம் பெற்றுக்கொடுக்க பல்லாண்டு பழமையான சம்பவங்களை தூசிதட்டி எடுத்து சம்பந்தப்பட்டவர்களை அம்பலப்படுத்த முயலும் போது; எமக்கு விடுதலை பெற்றுத் தரப்போவதாகவும், சமூகத்தின் முற்போக்கானவர்களாக தங்களைக் கட்டமைத்தவர்களும் முதலில் இவ்வாறான ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று வாதிட்டனர். ஆனால் அவர்களைச் சேர்ந்த ஒருவர் தனக்கும் அந்த வன்புணர்வுச் சம்பவத்திற்கும் தொடர்பே இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடமே எழுதி வாங்கி வைத்துள்ளார்.

இப்போது மீண்டும் இச்சம்பவம் எமது போராட்ட கனவான்களின் மீது பல கேள்விகளை எழுப்புகின்றது. அக்குழந்தைப் போராளியின் மீது வன்கொடுமை புரிந்தவர்கள் யாரும் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த ஏலியன்கள் அல்ல. இக்கொடுமையயைப் புரிந்தவர்கள் புளொட் அமைப்பினர் அல்லது அதிலிருந்து வெளியேறிய குறிப்பாக தீப்பொறி சார்ந்தவர்கள் என்பது அப்போதைய சந்தர்ப்ப சூழ்நிலைகளின்படி உறுதியாகின்றது. யாழ் கொக்குவில் பொற்பதியில், புளொட் செறிந்திருக்கின்ற இப்பகுதியில் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்துள்ளது. மாற்று அமைப்புகள் எதுவுமே இச்சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்படவில்லை. அதனால் ஒரு குழந்தைப் போராளியின் மீது வன்கொடுமை புரிந்தவர்களை புளொட் அமைப்பும் தீப்பொறியினரும் இனம்கண்டு அம்பலப்படுத்த வேண்டும். இக்கொடுமை தனி ஒருவரினால் மட்டும் இழைக்கப்பட்டிருக்கவில்லை. இந்த உண்மைகளை தனியொருவர் மறைக்கவில்லை. ஒரு குழுவாகவே இந்த உண்மைகளை மறைக்கின்றனர்.

பாலியல் வல்லுறவு என்பது வெறுமனே பாலியல் இச்சையால் தூண்டப்பட்டு நடைபெறுகின்ற கொடுமை என்பது மிகவும் குறுகிய பார்வை. இக்குழந்தைப் போராளியின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடுமையானது, பிற்காலத்தில் யாழ் புங்குடுதீவில் மாணவி வித்தியாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமையுடன் ஒப்பிடக் கூடியதே. குற்றத்தை இழைத்தவர்கள் வித்தியாவை நன்கு தெரிந்தவர்கள். வித்தியாவின் குடும்பத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். அந்தப் பழிவாங்கல் மற்றும் பெண் மீதான தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்தும் வகையிலேயே இக்கொடுமையயைப் புரிந்தனர். இவ்விரு குழந்தைகளின் மீதும் இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு இடையே நிறைய ஒற்றுமைகளை அவதானிக்க முடியும்.

இவ்விரு பாலியல் வன்கொடுமைகளும் பாலியல் வன்கொடுமையாளர்களின் ஒத்த மனநிலையயை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூட்டாக இணைந்து இவ்வண்கொடுமையயைப் புரிந்துள்ளனர். வன்புணர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட பெண் சார்ந்தவர்களினால் பாதிக்கப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையிலேயே அக்கொடுமையயைப் புரிந்துள்ளனர். மாணவி வித்தியாவின் தாயார் வன்புணர்ந்தவர்களுக்கு எதிராக ஒரு வழக்கில் சாட்சி சொன்னதும், வித்தியா ஒருவனின் காதலை நிராகரித்ததும் வித்தியாவின் இக்கொடூர நிகழ்வுக்கு அடிப்படைக்காரணங்களாக இருந்தது. அதேபோல் குழந்தைப் போராளியின் வன்புணர்விலும் அக்கொடுமையயைப் புரிந்தவர்கள் தங்களது உரையாடலை பதிவு செய்ததை கேட்டுள்ளனர் தங்களை வேவுபார்ப்பதை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்துவதிலும் தங்களுடைய கொடிய செயலை நியாயப்படுத்தவும் அவர்கள் முயன்றுள்ளனர். ஒரு பெண்ணுடல் மீது ஆண் செலுத்தக் கூடிய அதிஉட்சபட்ச அதிகாரமே பாலியல் வன்புணர்வு. அவளைக் கொல்லாமல், விட்டுவைப்பது காலத்திற்கும் அவளைப் பழிதீர்க்கின்ற கட்டற்ற அதிகார வன்முறை. மாணவி வித்தியாவைக் கூட கொடியவர்கள் கொலைசெய்ய முற்பட்டதாகத் தெரியவில்லை. இழைக்கப்பட்ட கொடுமையினால் அவர் உயிரிழந்தார். குழந்தைப் போராளியின் விடயத்தில் கொடியவர்கள், அவள் தனக்கு நிகழ்ந்ததை மற்றவர்களுக்கும் சொல்லி அவர்கள் மீதும் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று எண்ணியுள்ளனர்.

இவ்விரு சம்பவங்களிலும் பாலியல் வன்புணர்வாளர்களின் மனநிலை சர்வதேச பாலியல் வன்புணர்வாளர்களின் மனநிலையோடு ஒத்ததாகவே இருந்துள்ளது. 1970க்களில் அமெரிக்காவில் 50 பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்கள் மத்தியில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் அதனை ஒத்துக்கொண்டும் இருந்தனர். இவர்கள் பல்வேறுபட்ட சமூக, பொருளாதார, கலாச்சாரப் பினினணிகளுடன் இருந்தனர். ஆகவே இவ்வாறானவர்கள் தான் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவார்கள் என்றும் மற்றையவர்கள் ஈடுபடமாட்டார்கள் என்ற முடிவுக்கும் வந்துவிட முடியாது. புரட்சியாளன் போர்வையில் இருப்பவனும் மற்றையவர்களும் யாரும் இக்கொடுமையயை நிகழ்த்த தயங்காதவர்கள்.

பொதுவாக பாலியல் வன்புணர்வாளர்கள் மற்றவர்கள் பற்றிய கழிவிரக்கம் அற்றவர்களாகவும், தங்களைப் பற்றிய அதீத உணர்வுடையவர்களாகவும், தங்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிப்பவர்களாகவும், பெண்களை மதிக்காதவர்களாக, அவர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்துவபவர்களாக இருப்பர். பாலியல் வன்புணர்வு என்பது பாலியல் இச்சையைக் காட்டிலும் அதிகாரத்தை நிலைநிறுத்தவே அது பெரும்பாலும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. பெரும்பாலும் இளம் ஆண்களினால் மேற்கொள்ளப்படுகின்ற பாலியல் வன்புணர்வுகள் பெருமளவில் அவர்களால் அறியப்பட்ட பெண்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பாலியல் வன்புணர்வாளர்கள் தெரியாத பெண்களை வன்புணர்வது அரிதாகவே நடைபெறுகின்றது. குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரினால் பெரும்பாலும் அறியப்பட்டவர்களாகவே உள்ளனர்.

குழந்தைப் போராளியின் மீதான பாலியல் வன்புணர்வைச் செய்த கொடியவர்கள் அவருக்கு நன்கு தெரிந்தவர்களாகவும் அவரினால் அல்லது அவரைச் சார்ந்தவர்களினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் மற்றவர்கள் மீது கழிவிரக்கம் காட்டாதவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். இவர்கள் பெண்களை வெறுப்பவர்களாக, ஐயப்பாடு உடையவர்களாகவும் இருந்திருக்க வாய்ப்புண்டு.

கொடிய அச்சம்பவம் நடந்து நான்காவது தசாப்தத்தை எட்டுகின்ற நிலையிலும் கொடியவர்களை பாதுகாத்து வருகின்றோம். நட்புக்காக, உறவுக்காக ஒரு மிகப்பெரிய கொடுமையை மூடி மறைக்கின்றோம். இதில் தற்போது வெளிப்படையாக தங்களுடைய சாட்சியங்களை பதிவு செய்ய ஜெ ஜென்னியும் இச்சம்பவம் பற்றிய கேள்வியயை எழுப்பியுள்ள அசோக் என அறியப்பட்ட யோகன் கண்ணமுத்துவும் அன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்பின் முக்கிய பொறுப்புகளில் இருந்த போதும் அவ்வமைப்புப் பற்றி என்றுமே ஒரே அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தவர்கள் அல்ல. இவ்விடயத்தில் சம்பந்தமுடையதாக தொடர்புபடுத்தப்படும் தீப்பொறி மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் இது தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு முன்வரவேண்டும். அதைவிடுத்து ஜென்னி மீதும் அசோக் மீதும் காழ்ப்புணர்வுகளைக் கொட்டுவது உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு எவ்விதத்திலும் உதவாது. முதலாளித்துவ நீதித்துறையே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஆண்கள், தாங்கள் குற்றத்தை புரியவில்லை என்பதை நிரூபிக்க கோருகின்றது. அப்படியிருக்கும் போது விடுதலை வேண்டிப் போனவர்கள் அதே நோக்கத்திற்காகச் சென்ற ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமையின் உண்மையை வெளிகொணர கடந்த மூப்பதற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக என்ன செய்கின்றார்கள்?

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Democracy
    Democracy

    தமிழர்கள் ஆப்ப்பிரிக்கர்கள் போல் எப்போதும் கருப்புத்தோலுடன் இருந்திருக்கவில்லை.
    “கருப்பு” என்றால் “அழகு”, “அடிப்படை” என்றுதான் சங்க இலக்கியங்களில் உள்ளது!
    ஐரோப்பியர்கள்தான் ஆப்பிரிக்கர்களிடமிருந்து பரிணாம வளர்ச்சியடையுந்தவர்கள். தமிழ்ப் பகுதிகளில் EXTINCTஆன வேறு இரு SPECIES இருந்துள்ளன. அந்தமான் எச்சங்கள் சான்று!
    இவைகள், ஆப்பிரிக்காவிலிருந்து வளர்ச்சியடைந்த சிறிது வெளிர் தோலுடன் (குரங்கு முடியை மழித்தால் வெள்ளைத்தோல்) மத்திய ஆசிய அரேபிய SPECIESகளுடன் பெருமளவு கடல்மார்க்கமாக தமிழர்கள் கலந்துள்ளனர்.

    ஆதிகாலத்தில் பிரிட்டிஷ் தீவு SPECIESகளும் கருப்புத்தோல் நீலநிறக் கண்களுடனேயே இருந்துள்ளனர்.
    ஆனால் ஆப்பிரிக்க மரபணுவே SURVIVAL of the FITTESTல் உலகம் முழுவதுவும் பெருகியுள்ளது.

    இந்த மரபணு குணம், MATERIAL INTERPRETATION எனப்படும் “பொருளையும் (matter), சக்தியையும் (Energy)” பிரித்துப் பார்க்கும் ஆற்றலுடையது (Monism in Catesian dualism). கிறிஸ்துவுக்கு முன், புத்த மதத்திற்கும் சமண மதத்திற்கும் இதன் அடிப்படையில்தான் தர்க்கம் நடந்தது!

    இன்னொன்று, “பாலியியல்” என்றாலே “பாலியியல் வன்புணர்வுதான்”. இது வைரஸின் (RNA VIRUS) குணம் (BASIC ANIMAL INSTINCT).
    இது நாகரீகப்படுத்தப்பட்டது ஒரு சமூக கலாச்சார PHENOMENONதான்.
    இதைப்பற்றி விரிவாக ஆராய நேரமில்லை.
    இத்தகைய சமூக கலாச்சார கட்டுப்பாடுகள் தளரும்போது (crisis, conflicts), மீண்டும் BASIC ANIMAL INSTINCTட் வெளிப்படும்.
    YOU WOULD HAVE THOUGHT THIS BEFORE THE CONFLICT START and DISCUSSED with UMA MAHESWARAN. Uma Maheswaran OBEY what is trained like K.Anbazhagan, VR.Nedunchezhiyan, NOT very bad person, educated and civilized.
    UMA was introduced by Thiruchi Soundarrajan to SDS.

    இதனால்தான் சமண கடைசி தீர்த்தக்காரருக்கு “மகாவீரர் (இனப்பெருக்க RBA வைரஸ்)” என்று பெயர் வந்தது.

    இதுபோக, 1500களில் பெருமளவில் ஆசியா வந்த ஐரோப்பியர்கள், தங்கள் உள்ளார்ந்த MATERIAL INTERPRETATION னால், வெளிப்படையான தோலின் நிறத்தை அடிப்படையாக பார்க்கும் (நீலநிறக்கண்களின் ஒருதிசை பரிணாம வளர்ச்சி?) குணத்தைக் கொண்டிருந்தனர் !

    Reply
    • Democracy
      Democracy

      Thiruchi K Soundrarajan the last still surviving since Aringar ANNA period (like SAMBANTHAN of TNA). K.Soundrarajan introduced UMA MAHESWARAN (PLOTE) to SDS, all destroyed by using their energy by various #ADVICES,
      but the ADVICERS only speaking, not using their energy LONG surviving, settled good all their children…

      another survival mode… a trace of another Species?.. or “THEOLOGICAL SECTARIANISM within the Caste system” to replace Vijayanagar brahminism?
      did you not think..V.Prabhakaran without the education confused within this SECTARIANISM and commited murderes by became a MAD?

      https://youtu.be/HuoRIFbdbag

      Reply