கடற்கரைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆமை – காரணத்தை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு !

உனவட்டுன கடற்கரைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய ஆமையின் மரணத்திற்கான காரணம். தொடர்பில் ஆராயுமாறு காலி மேலதிக நீதவான் சஞ்சீவ பத்திரண உத்தரவிட்டுள்ளார்.

தீப்பற்றிய எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலிலிருந்து வெளியேறிய இரசாயன திரவியங்களின் காரணமாக இந்த ஆமை உயிரிழந்துள்ளதா என்ற சந்தேகம் நிலவியுள்ளதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, உயிரிழந்த ஆமையின் உடலை, அத்திட்டிய வனஜீவராசிகள் கால்நடை மருந்துவ அலுவலகத்திற்கு அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *