ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். தனது சுழற்பந்து வீச்சு மூலம் உலக முன்னணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வருகிறார். ஐ.பி.எல், பிக் பாஷ் உள்ளிட்ட ஏராளமான டி20 லீக்கில் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்கிறார்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டி டி20 அணியின் தலைவராக ஹஷ்மதுல்லா ஷாஹிதியை நிமியத்தது. துணைக் தவைராக ரஹ்மத் ஷாவை நியமித்தது. ரஷித்கானை புதிய துணைத்தலைவராக நியமித்துள்ளது. ஆனால் கேப்டனாக நியமிக்கவில்லை.
இந்த நிலையில் தலைவர் பதவியை விரும்பவில்லை என ரஷித் கான் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘நான் ஒரு வீரராக சிறந்தவன் என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். துணைக் கேப்டன் என்பது எனக்கு சிறந்தது. என்னுடைய ஆலோசனை தேவைப்படும்போது, தலைவருக்கு உதவியாக இருப்பேன். கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பது எனக்கு சிறந்தது.
ஒரு வீரராக அணிக்கு சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். தலைவராக மாறுபட்ட கோணத்தில் யோசிப்பதைவிட, என்னுடைய பணி அணிக்கு மிகவும் சிறந்தது, அணிக்கான எனது செயல்பாடு பாதிக்கப்படுமோ, என்று நான் பயப்படுகிறேன். இது முக்கியமானது. இதனால் ஒரு வீரராக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. கிரிக்கெட் போர்டு, தேர்வுக்கு எந்த முடிவை எடுத்தாலும், அதற்கு துணையாக நான் இருப்பேன்’’ என்றார்.