கன்னட மக்களிடம் மன்னிப்பு கோரிய கூகுள் நிறுவனம் !

இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டப்பட்ட விவகாரத்தில், எதிர்ப்பு கிளம்பியதால், கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியது.

கூகுள் தேடலில் இந்தியாவின் மோசமான மொழி எது என தேடுதலில் பதிவிட்டால் அது கன்னடம் மொழி என காட்டியது. இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், கூகுள் நிறுவனம் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டப்பட்டதற்கு கூகுள் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. மேலும், கன்னட மொழி தொடர்பாக கூகுள் தேடு தளத்தில் தவறாக வெளியான பதிவுகளையும் கூகுள் நீக்கியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *