இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற் கரை ஓரங்களில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடலங்கள் கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளன.
நேற்று ஞாயிற்றுக் கிழமை இவ்வாறு கரை ஒதுங்கிய 6 கடலாமைகள், ஒரு டொல்பின் மீனின் உடலம் மீட்கப்ப்ட்டுள்ளது. இதில் குறிப்பாக இலங்கையின் கடலாமைகள் தொடர்பில் பிரசித்தமான இடமாக கருதப்படும் கொஸ்கொட பகுதியில் மூன்று ஆமைகள் கரை ஒதுங்கியிருந்தன.
இதுருவ, கொஸ்கொட, வாதுவ, தெஹிவளை மற்றும் பயாகலை கடற் கரைப் பகுதியிலேயே இந்த ஆமைகளும் டொல்பின் மீனும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியிருந்தன.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக கடலில் கலந்த பல தொன் நிறைக் கொண்ட இரசாயனங்கள் காரணமாக இவ்வாறு கடல் வாழ் உயிரினங்கள் இரந்து கரை ஒதுங்குகின்றனவா என அவ்வந்த பகுதிகளின் வன ஜீவராசிகள் திணைக்களம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்க்ப்ப்ட்டுள்ளன.
இதில் குறிப்பாக கரை ஒதுங்கிய உயிரிழங்களின் மாதிரிகளை பேராதனை பல்கலைக் கழகத்தின் மிருக வைத்திய பீடத்துக்கும் அத்திட்டிய மிருக வைத்திய பகுப்பயவு நிலையத்துக்கும் அனுப்பி இரசாயனத் தாக்கம் தொடர்பில் உறுதிப்படுத்த வன ஜீவராசிகள் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கனவே தெற்கின் உனவட்டுன கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆமை தொடர்பில் அத்திட்டிய மிருக வைத்திய பகுப்பாய்வு நிலையம் ஊடாக அரிக்கை பெற காலி நீதிமன்றம் உத்தர்விட்டிருந்த பின்னணியில், பேராதனை பல்கலைக் கழக்த்தின் மிருக மருத்துவ பீடம் ஊடாகவும் இது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்ப்ட்டுள்ளன.