“கொரோனா தடுப்பூசிகளின் ஆயுட்காலம் குறைந்த பட்சம் ஒரு வருடம் மட்டுமே ” – பேராசிரியர் அர்ஜுன டி சில்வா

2020 வருடம் முழுமையாக கொரோனா தொற்று அச்சம் நீடித்திருந்த நிலையில் இந்த வருடம் முழுக்க முழுக்க கொரோனாவுக்கான தடுப்பூசியை நுகர்வது தொடர்பாக உலக நாடுகள் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் உலகின் பிற நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. அமெரிக்கா 50 கோடி தடுப்பூசிகளை அளிக்கப் போவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. பிரிட்டன் தங்களிடம் உபரியாக உள்ள சுமார் 10 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை வழங்கும் என்று அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க இலங்கை ஜனாதிபதி கோத்தாபாயராஜபக்ஷ சீனா, ஜப்பான், இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா என பல நாடுகளிடமிருந்தும் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்கான நகர்வுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் , தற்போது காணப்படும் எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் வாழ்நாள் முழுவதும் நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் என உத்தரவாதமளிக்கமுடியாது என்று, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு கொரோனாதடுப்பூசிகளையும் பெற்ற ஒருவருக்கு குறைந்த பட்சம் ஒரு வருடம் வரை நோயெதிர்ப்பு சக்தி காணப்படும் என கருதப்படுகின்றது.

அத்துடன், குறித்த நோயெதிர்ப்புசக்தி ஒரு வருடத்துக்கு மேல் நீடிக்குமா இல்லையா என்பது குறித்து விஞ்ஞான ரீதியான பதிலொன்று இதுவரை கண்டறியப்படவில்லை.

ஆகவே, கொரோனா தடுப்பூசியை வருடத்துக்கு ஒரு தடவை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு தடவை பெற்றுக் கொள்ள வேண்டியநிலை ஏற்படுமா ? என்பது குறித்து உறுதி கூற முடியாது.

இதேவேளை, சினோபாம் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதன் பின்னரும், நோய் அறிகுறிகள் காணப்பட்ட சிலர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அறிகுறிகள் காணப்பட்ட, 22 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *