“சந்திப்பு தடைப்பட்டதை எதிர்மறையானதாக கருத வேண்டாம்.”- கூட்டமைப்பிடம் ஜனாதிபதி செயலகம் தெரிவிப்பு !

கடந்த புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபயவிற்கும், சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த போதும் அது ஈற்றில் பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக கூறி ஜனாதிபதி தரப்பால் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை காலையில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்  தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு சம்பந்தனுடன் உரையாடியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறிதொரு தினத்தில் சந்திப்பை நடத்துவதற்கே எண்ணங்கொண்டிருப்பதாகவும் அதற்கான திகதியை விரைவில் அறிவிப்பார் என்றும் கூறியிருக்கின்றார்.

அத்துடன், முதலாவது சந்திப்பு தவிர்க்க முடியாத காரணங்களால் இடம்பெறவிலலை என்றும் அதனையிட்டு எதிர்மறையாக கருதவேண்டாம் என்றும் குறித்த இணைப்பாளர் சம்பந்தனை கேட்டுக்கொண்டதாக தெரியவருகின்றது.

எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு இரத்தானமை தொடர்பில் எவ்விதமான எதிர்மறையான வெளிப்பாடுகளும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *