“2 இலட்சத்து 79 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகளை வழங்கிய பின்பே பாடசாலைகள் திறக்கப்படும்.” – கல்வி அமைச்சு !

நாட்டில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்ற போதிலும், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

எனினும் பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் அதிபர்கள் , ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை துறைசார் ஊழியர்கள் 2 இலட்சத்து 79 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகளை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானம் குறித்து வினவியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் ஆலோசனை வழிகாட்டல்கள் கிடைக்கப் பெற்ற பின்னர் வெவ்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளை திறக்க தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *