இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலகடெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை புகுந்து விளையாடியதால் முதல் நாள் ஆட்டம் ‘நாணயச்சுழற்சி’ கூட இல்லாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், நாணயச்சுழற்சி வென்று பந்து வீச்சை நியூசிலாந்து தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 64.4 ஓவர்களில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 146 ஓட்டங்கள் எடுத்திருந்து.

3-ஆம் நாள் ஆட்டம் இன்று காலை துவங்கியது. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில், விராட் கோலி 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 4 ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அஸ்வினும் 22 ஓட்டங்களில் வெளியேறினார்.
நடுவரிசை துடுப்பாட்டவீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால், 200- ஓட்டங்களை எட்டவே இந்திய அணி கடும் பாடுபட்டது. 92.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரகானே 49 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வருகிறது. நியூசிலாந்து அணிதற்போது வரை 57 ஓட்டங்களை பெற்றுள்ள அதே வேளை ஒரு விக்கெட்டையும் இழக்கவில்லை.