எரிபொருள் விலையேற்றை கண்டித்தும், அதிகரிக்கப்பட்ட விலையை குறைக்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியினர், சபைக்குள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். கோஷங்களையும் எழுப்புகின்றனர். இதனால், சபைக்குள் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சபைக்குள் எழுந்துநின்றும், சிலர் சபைக்கு நடுவே அமர்ந்திருந்தவாறும் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.
எரிபொருள்களின் விலைகளை குறைக்குமாறு கோரியும் அரசாங்கத்துக்கு எதிரான சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.