நாடாளுமன்றில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள தமிழ் அரசியல்கைதிகள் விவகாரம் – சுரேன் ராகவனை ஒரு நாய் போல குரைப்பதை நிறுத்துமாறு கூறிய சுமந்திரன் !

சரி – பிழை , அரசியலாளர்களுடைய விமர்சனங்கள் இவற்றுக்கு அப்பால் நாடாளுமன்றில் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பான விடயங்கள் பேசு பொருளாகியுள்ளமை வரவேற்கத்தக்கது. நாமல்ராஜபக்ஷ தொடக்கிவைத்த இந்த விவாதம் பெரியளவில் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் , அரசியல் கைதிகள் பிரச்சினையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனுக்கும் சுரேன் ராகவனுக்கும் இடையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சூடான கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது.

அரசாங்க உறுப்பினராக இருந்தபோதிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த சுரேன் ராகவன் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

அதனைத்தொடர்ந்து, கைதிகள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய சுமந்திரன் எடுத்த நடவடிக்கைகள் குறித்து சுரேன் ராகவன் கேள்வியெழுப்பினார்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதையடுத்து, சுமந்திரன் ஒரு கட்டத்தில் சுரேன் ராகவனை ஒரு நாய் போல குரைப்பதை நிறுத்துமாறுக் கூறினார்.

அதேநேரம், தமிழ் கைதிகளின் விடுதலை விடயத்தில் அரசியல் நாடகம் நடத்த வேண்டாம் என்றும் சுமந்திரன் அரசாங்கத்திடம் கூறினார்.

அத்தோடு கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

2015 மற்றும் 2019 க்கு இடையில் 100 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முடிந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அங்கு பேசிய எம்.ஏ. சுமந்திரன் ,

அரசாங்கத்திற்கு முடிந்தால் அரசியல் கைதிகளை நாளைய பொசன் பௌர்ணமி தினத்தில் விடுதலை செய்யுமாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

இந்த விடயத்தில் அரசியல் நாடகத்தை நடத்தாமல் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதாக பலமுறை உறுதியளித்திருந்தாலும், அரசியல் கைதிகளை தடுத்து வைக்க இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையில் தீர்வு காண தற்போதைய அரசாங்கம் உறுதியாக இருந்தால் முதலில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இல்லாமல் செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *