அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி !

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனை ஔடதங்கள் தயாரிப்பு விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் மற்றும் பைசர் தடுப்பூசிகளை கலவையாக வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில் மேலும் 78 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படும் என்றும் அவை அடுத்த மூன்று வாரத்திற்குள் இலங்கையை வந்தடையும் என்றும் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மற்றும் பைசர் அல்லது மடர்னா தடுப்பூசிகளின் கலவை பயனுள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்களால் தரவு வெளியிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான பரிந்துரைகள் குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் நிபுணர்களின் குழுவின் கிடைக்கும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *