ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் பொசன் தினத்தையொட்டி முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் விடுதலை !

பொசன் போயா தினத்தை முன்னிட்டு சிறைகளில் நீண்ட காலம் உள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக அறிய முடிகின்றது.

பல ஆண்டுகளாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழு பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர் என சிறைச்சாலை முகாமைத்துவ மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் பொசன் பூரணை தினமான நாளைய தினம் அவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டமைக்காக பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 17 பேருக்கு  பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

இதில் 7 பேர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எனவும், எஞ்சியுள்ள 10 பேரும் அரசியல் கைதிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *